பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தொண்டு நெறியே சைவ நெறி - 27 9 மும் விருந்துண்டனர்." இரவுஉணவு முடித்த பின் பிள்ளையார் திருநீலநக்கரைத் தனியே அழைத்துப் பாணர் தங்க ஓர் இடம் தருக என வேண்டினார். அதற்குத் திருநீலநக்கர் தாம் அன்றாடம் முத்தீ வளர்க்கும் வேதிகையின் பக்கத்தில் பாணரும் அவர் மனைவியாரும் தங்க இடந் தந்தார் என்று பாடுகிறார் சேக்கிழார். “நின்ற அன்பரை 'நீலகண் டப்பெரும் பாணர்க்கு இன்று தங்கஓர் இடங்கொடுத் தருளுவீர்' என்ன நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்றுமற்றவர்க் கிடங்கொடுத்தனர் திரு மறையோர்' " "ஆங்கு வேதியில் அறாதசெந் தீவலஞ் சுழிவுற்று ஓங்கி முன்னையில் ஒரு படித் தன்றியே ஒளிரத் தாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோட யாழ்த் தலைவர் பாங்கு பாணியார் உடன் அருளாற்பள்ளி கொண்டார் தொடக்கத்திலிருந்து பிள்ளையாருடன் கூட இருக்கின்ற யாழ்ப்பாணரும் அவர் மனைவியாரும் போகுமிடமெல்லாம் எங்கே தங்கினர் என்று கூறாத காப்பியக் கவிஞர் கடுமையான வேள்வி செய்யும் திருநீல நக்கர் வீட்டில் இச் செய்தியை விரிவுபடுத்திக் கூறியதன் அடிப்படை யாது? விதி மார்க்கத்தில் இணைந்து நிற்கும் திருநீலநக்கரே பழைய தீண்டாமைக் கொள்கைக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார் என்றால் மற்றவர்பற்றிக் கேட்க வேண்டிய இன்றியமை யாமையே இல்லை எனலாம். பிள்ளையார் பாணரை உடன் வைத்துக்கொண்டு புரட்சி செய்தார் என்றால் அப் பாணரை மனைவியாருடன் யாக வேதிகை பக்கத்தில் துயிலுமாறு செய்து சேக்கிழார் அப் புரட்சியைத் தொடர்கின்றார். பெரிய புராணம் முழுவதிலும் காணப்படும் இரண்டு அரிசனர்களைச் சாதி அந்தணர்கள் விளிக்க வேண்டிய சந்தருப்பங்களில் எல்லாம் தவறாமல் ‘ஐயரே' என்று விளித்தார்கள் என்று பாடுகிறார் காப்பியப் புலவர். ஞானசம்பந்தர் யாழ்பாணரை வரவேற்ற போது, 'அளவிலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயர் நீர் உள மகிழ இங்க்ணைந்த உறுதி உடையோம்" என்றும்,