தொண்டு நெறியே சைவ நெறி 28 I விழிமிழலைப் பஞ்சம் தீர்த்தல் திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் இறைவனை நேரே கண்டு பாடியதுடன் மக்கள் துயர்துடைக்கும் பணியிலும் முழு மனதாக ஈடுபட்டனர் என்பதையும் காப்பியப் புலவர் விரிவாகப் பேசுகிறார். நாவரசரும், ஞானசம்பந்தரும் திருவீழி மிழிலைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில், 'மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி, விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை யாற்றா மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு ' கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங் கவலை வருமோ? என்று கருதினார்களாம். இவ்வாறு நினைந்த அவர்கள் மக்களைப் பார்த்து 'நீங்கள் இறைவனை வழிபடுங்கள் விரைவில் வளம் பெருகும்’ என்று கூறிவிட்டுப் போய்விடவில்லை! பஞ்சத்தால் மக்கள் படும் துயரத்தைக் கண்டு மனம் வருந்தி அன்றிரவு துயில்கையில், கனவில் இறைவன், 'உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய் உமையடையாதெனினும் உம்பால் நிலவுசிவ நெறி சேர்ந்தார் தம்மை வாட்டம் நீக்குதற்கு நித்தம் ஒரோர் காசு நீடும் இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு' என்று கூறி அவ்வாறே காசும் அளித்தான். இந்த நிலையில் இரண்டு பெரியாரும் தனித்தனியே மடம் அம்ைத்துக் கொண்டு இறைவன் தந்த பொற்காசை மாற்றி உணவுப் பொருள்கள் வாங்கி உணவிட்டார்கள். பசித்தோர் அனைவரும் வந்து உண்ணலாம் என்று அறிவிக்கும் நேரத்தில் அப்பெருமக்கள் கூறிய சொற்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டியவை. 'நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் உண்பதற்கு வருக என்று தீதில் பறை நிகழ்வித்து'........ 75 அழைத்தார்களாம்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/309
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
