பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு நெறியே சைவ நெறி 287 தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு பெரிய சமயப் போராட்டத்தின் இறுதிக் கட்டமாகிய இதுபற்றி அறியத் தேவாரம், கல்வெட்டு வரலாற்றுக் குறிப்பு என்ற எதிலும் ஒரு சான்றுகூட இல்லை என்பது சிந்திக்கத்தக்கது. சேக்கிழார் நம்பியின் பாடல்களை மிகக் கவனத்துடன் சில இடங்களில் எடுத்துக் கொண்டு, பல இடங்களில் ஒதுக்கியும் விட்டுவிடுகிறார். என்றாலும் இப்பகுதியை எடுத்துக் கொண்டு பாடுகிறார். தமிழ்நாடு, நாகரிகம், பண்பாடு என்பவற்றை அடியோடு அழிக்க முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்ற களப்பிரர் விட்டுச்சென்ற எச்சமாகும் வெளியிலிருந்து வந்த சமணரின் அரசியல் தலையீடு. சமயப்போராட்டம் என்று வந்துவிட்ட பிறகு படுகளத்தில் ஒப்பாரிக்கு வேலை இல்லை. இதனால் ஒரு நாட்டையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும், தொல் பழஞ் சமயமாகிய சைவத்தையும் மீட்கலாம் எனக் கருதிய பாண்டியன் இக் கழுவேற்றம் செய்தான் என்கிறார் சேக்கிழார். ஆனால் திருஞானசம்பந்தர் இதில் நேரிடையாகப் பங்கு கொள்ளவில்லை; என்றாலும் அதனைத் தடுத்திருக்கலாமே என்று பேசுகிறவர்கட்கு ஒர் அரசன் மற்றைய அரசன் பணியில் தலையிடுவதில்லை என்ற பெரிய உண்மையைச் சேக்கிழார் கூறுகிறார். அவர் பயன்படுத்தும் சொற்கள் "புகலியில் வந்த ஞானப்புங்கவர் அதனைக் கேட்டும் இகலிலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவிலாச் சமணர் செய்த செய்கையால் சாலும் என்றே மிகையிலா வேந்தன் செய்கைவிலக்கிடா திருந்தார்’ என்பனவாகும். கழுவேற்றியது, அவர்கள் சமணர்கள் என்பதால் அன்று; தீ வைத்த குற்றத்துக்கே தண்டனை வழங்கப்பட்டது என்கிறது. பெரிய புராணம். 'மிகையிலா என்ற சொல்லால் இக் குற்றத்திற்கு இந்தத் தண்டனை சரியானது என்று கருதிய தால் பேசாமல் இருந்துவிட்டார் என்கிறது. பிள்ளையார் நாவரசர் வேறுபட்ட கொள்கைகள் சமயப் போராட்டம் செய்யவந்த ஒருவர் தம்மை மன்னன், இறைவன் என்று கூறிக்கொள்வதன் நோக்கம் இதுதான். தண்டனை வழங்குவதும் போர் புரிவதும் மன்னர்களுடைய செயல்களாகும். சைவ சமணப் போராட்டத்தில் நாவரசரும் அகப்பாட்டார் எனினும் அவர்போராடவோ திருப்பித் தண்டனை வழங்கவோ தயாராகவில்லை. போரில் ஈடுபடும் தலைவர்கள்