பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு நெறியே சைவ நெறி 297 இக் கடற்படி நிகழமுன் கொடுக்கும் இயல்பின் நின்றவர்; உலகியற் பகையார் ‘’’ என்று கூறி அவரை அறிமுகஞ் செய்து வைத்த கவிஞர், 'நீறுசேர்திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப் படமுடித்து மாறிலாத தன்னெறிவினில் விளங்கும் மனையறம் புரி மகிழ்ச்சியின் வந்த பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ்நாளில் ' ஒன்று நிகழ்ந்தது கூறப் போகு முன் 'நன்னெறியில் விளங்கும் ம்னையறம் புரி மகிழ்ச்சியுடன் இருந்தார்' என்றும், வாழ்க்கை யின் மிக உயர்ந்த குறிகோள் ஒன்று உண்டானால் அது அடியவர் மனத்து நினைப்பன யாவையும் வினைப்பட முடிப்பதுதான் என்றும் கொண்டார் என்றுங் கூறுத்ல் காணலாம். அதற்கு மேலும் ஒருபடி சென்று அவர்கள் ஏவினதைச் செய்தலே பெறுதற்கரிய பேறு என்றும் கொண்டார். எனவே வாழ்க்கையில் அவர்கொண்ட குறிக்கோள், உயிரினும் மேம்பட்டதாக அவர் நினைத்தது, அடியார் மனத்து நினைத்த யாவற்றையும் செய்து முடிப்பதுதான் என்பதாகும். இந்நிலையில் இந்த அடியார்களைப்பற்றி ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். இவர்கள் கொண்ட குறிக்கோள் சிறியதோ, பெரியதோ, செயற்கரியதோ, அற்பமானதோ, அதுபற்றிக் கவலையே இல்லை. அந்தக் குறிக்கோளை நிறைவேற்றியே ஆகவேண்டும். அந்த நிறைவேற்றத்தில் உயிர் விடவேண்டி வந்தால் அதைவிட அவர்கள் மகிழ்ச்சி அடையும் செயல் வேறு இல்லை. கண்காணாத ஏதோ ஒரு குறிக்கோளுக்காக உயிரை விட முடியுமா? அது செய்யக் கூடியதா? நம்போன்றவர்கட்கு அது செய்யக் கூடியதன்று. ஆனால் அவர்களைப் பொறுத்தமட்டில் அது செய்யக் கூடியதேயாகும். அதனாலேயே இவர்களைச் செயற்கருஞ் செயல்கள் செய்த பெரியார்கள் என்று கூறுகிறோம். ஒரு நாள் துர்த்த வேடத்துடன் ஒருவர் வந்தார். அவரை வரவேற்ற இயற்பகையாரிடம், 'கொன்றை வார் சடையா ரடியார்கள் - குறித்து வேண்டின குணமெனக் கொண்டே ஒன்றும் நீர் எதிர்மறாது உவந்தளிக்கும் உண்மை கேட்டு தும்பால் ஒன்று வேண்டி