34 6 பெரியபுராணம்- ஒர் ஆய்வு கொள்கைப் பிடிப்பில் நிகழும் போராட்டம்-ஏயர்கோன் என்ன நிலையிலும் சிவகோசரியார், ஏயர்கோன், கலிக்காமர் என்பவர்களுடைய கொள்கை ஈடுபாட்டையும் தம் கொள்கையில் கொண்ட உறுதிப்பாட்டால் இறைவனையும் ஒதுக்குகின்ற நெஞ்சுரத்தையும் வியக்கத்தான் வேண்டும். சோணாட்டுக் காவிரி வடகரையில் உள்ள திருமங்கலம் என்ற ஊரில், அரசனுக்குச் சேனாபதிகளாகப் பதவி வகிக்கும் குடிப்பிறந்த ஏயர்கோன் கலிக்காமர் என்ற அன்பர் திருநாவலூரர் இறைவனைப் பரவையார் வீட்டிற்குத் தூதாக அனுப்பினார் என்ற செய்தியைக் கேட்டார். அவருடைய சினம் கட்டுக்கடங்க வில்லை. ‘நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! சால ஏயும்என் றிதனைச் செய்வான் தொண்டனாம்! என்னே பாவம்! பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியாற் கேட்ப தாயின. பின்னும் மாயா திருந்தது என் ஆவி என்பார்' " 'காரிகை தன்பாற் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் பாரிடை நடந்து செய்ய பாததாமரைகள் நோவத் தேரணி வீதியூடு செல்வது வருவதாகி ஒரிர வெல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று ' 'நம்பர்தாம் அடிமை ஆற்றா ராகியே நண்ணினாரேல் உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே? இதனுக்குள்ளம் கம்பியா தவனை யான் முன் காணுநாள் எந்நாள்: ' நம்பியாரூரர் இறைவனைத் தூதாக அனுப்ப எவ்வாறு துணிந்தார்? தம் பெருமைக்கு இழுக்கு நேரிடும் வகையில் தலைவனை அடியான் ஏவுவதா? இந்த ஒரு செயலைக் கூசாமற் செய்பவன் தொண்டனா? இவன்படும் அவதி பொறுக்காமல் இறைவன் நேரே வந்தால் இப்படி ஒரு பணியையா அடிமை எசமானிடம் இடுவது? கேவலம் பெண் மேற்கொண்ட அன்பினால் இறைவனையே ஒர் இரவு முழுவதும் திருவாரூர்த் தெருக்களில் போவதும் வருவதுமாகச் செய்த ஒருவனை நான் நேரேகாண்பேனாகில் என்ன நடக்குமோ யார் கண்டது? " என்ற முறையில் நினைத்து எல்லையற்ற துயரத்துடனிருந்த ஏயர்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/376
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
