பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரியபுராணம் - ஓர் ஆய்வு என்பது பிரக்ருதி, விக்ருதி என்பவற்றின்கூட்டாகும். புராணங் களிலும், சிவாகமங்களிலும் மூலப் பொருளாகிய சிவத்தை இச் சொல்லைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். ' இலிங்கம் என்பது நிஷ்கள நிலையைக் குறிப்பதா?அன்றி சகள நிலையைக் குறிப்பதா? என்ற வினாவை எழுப்பிக் காட்சிக்கு அகப்படும் வடிவுடையதாயினும் முதலும் முடிவுமற்றதாய் நிஷகள ஸ்தம்பரூபமாய் இருத்த்லின் அது நிஷ்களமே என்கிறது சிவபுராணம். ' 'சிவனுடைய இலிங்க வடிவம் மூன்று குறிப்புப் பொருள்களை யுடையது. லிங்கம் என்பது ஒரு குறியீடு: லிங்கம் என்பது குறி. லிங்கம் என்பது பிரபஞ்ச மூலமாகிய பிரகிருதி. மூன்றாவது உள்ளதை சிவனுடைய நுண்ணுடம்பு (லிங்க சரீரம்) என்பர். அழிவிலாப் புருஷன் என்கிறது லிங்க புராணம்." லிங்கம் என்பதன் முதற் பொருள் குறி அல்லது அடையாளம் என்பதே ஆகும். ஒரு பொருள் உள்ளது என்பதற்கு இது அடையாளம். ஸ்வேதாஸ்வதர உபநிடதம்' முதன் முதலாக இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறது. சிவத்திற்கு எந்த லிங்கமும் அடையாளமும் இல்லை என்று கூறுகிறது. எந்தக் குணமோ அடையாளமோ இல்லாமல் கடந்து நிற்பதுவே சிவம் என்கிறது அந்த உபநிடதம். மேலும் லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் கூறும் பொழுது காணக்கூடிய ஒரு பொருள் உண்டு என்பதற்கு இது அடையாளம் என்பது மட்டுமல்லாமல் காணமுடியாத ஒரு பொருள் பருப்பொருளாக வெளிப்படுவதற்கு முன் உள்ளே உறை கின்றதன் அடையாளம்'என்றும் கூறுகிறது. ஞெலிகோல் கட்டையில் நெருப்பு மறைந்து உள்ளே உறைகிறது. அதனுள் லிங்கமாக உறையும் நெருப்பை அழிக்க முடியாது. மற்றொரு கட்டையின் மூலம், உள்ளே உள்ள இந்த நெருப்பை வெளிக் கொணர முடியும்.’’ தூண்டப்படாமல் உள்ளே உள்ள மறைந்திருக்கும் நெருப்பு, காணமுடியாத அதன் சாரம் எதுவோ அதனை நெருப்பின் லிங்கம் என்கிறோம். அது ரூபத்துடன் வெளிப்படுவ தற்கு இந்தச் சாரம் இன்றியமையாதது. ’ ருத்ர-சிவபரத்துவம் எவ்வாறு வளர்ந்திருக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் டாக்டர் கோண்டா பின்கண்ட முடிவைக் கூறுகிறார். - 'ஸ்வேதாஸ்வதர உபுநிடதம், வேதங்களிலிருந்து பல பகுதி களை எடுத்துக் காட்டி, அவற்றுள் ஒர் ஒருமைப்பாட்டைத்