பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரியபுராணம் - ஒர் ஆய்வு வகுத்தன. ஐந்து வகை வெளிப்பாடு என்பன ஈஸான, தத்புருஷ, அஹோர, வாமதேவ, சத்யோஜாதம் என்பவை யாகும். எட்டு வகை இருப்புக்களாவன - ஐந்து பூதங் கள், சூரியன், சந்திரன், புருடன் என்பவையாம். ஐந்து முகங் களிலும், அஷ்ட மூர்த்தங்களிலும் ஈஸ்ானம் என்பது காணப்படு கிறது. இம்மட்டோடு அல்லாமல் அஷ்ட திக்குப்பாலர்களுள்ளும் ஈஸானன் காணப்படுகிறான். ஈஸானன் என்ற இந்தச் சொல் அதர்வ வேத ஸம்ஹிதையிலும்' தைத்ரீய பிராமணத்திலும்' எந்த ஒரு தனிப்பட்ட தெய்வத்தையும் குறிக்காமல் அடையாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளதைக் காண்கிறோம். முதன் முதலில் ஸ்வேதாஸ்வதர உபநிடதந்தான் ஈஸ்ானன் என்ற இந்தச் சொல்லைப் பிரபு' என்றும் 'ஸரணம் ப்ரஹத்' என்றும் கூறப் பெற்ற சிவனுக்கு உரியதாக ஆக்கிற்று. 'ஏறத்தாழ கி.மு.400 வாக்கிலோ அன்றி அதற்கு முன்போ கூட ருத்ர சிவத்தின் எண் குணம், அஷட மூர்த்தம் என்பவை நன்கு நிறுவப்பெற்று விட்டன'என்கிறார் டாக்டர் கோண்டா. ' சூலகவதந்திரங்கள் வருணனையில், பவ, ருத்ர, ஸ்ர்வ, ஈலான, பசுபதி, உக்ர, பீம, மகான்தேவ என்ற பெயர்கள் காணப்படு வதுடன் ஆஸ்வலாயன கிரஹய சூத்திரத்தில்' 'ருத்ராய ஸ்வாஹா', 'ஹராய ஸ்வாஹா முதலான பன்னிரண்டு பெயர் கள் 'ஸ்வாஹா' என்ற முடிபுடன் காணப்படுக்ன்றன. ' 'என்றாலும் அஷ்டமூர்த்தி என்பது பழைய நூல்களில் காணப்படுவதுபோல ஐந்து முகங்கள் பற்றிய குறிப்புக்கள் எப்பொழுது தோன்றின என்பது அறியப்படமுடியாத மறை பொருளாகவே உள்ளது. மஹாபாரதத்திலும் காணப்படாத இப் பெயர்கள் தைத்ரீய ஆரண்யகத்தின் பத்தாவது பகுதியில் முதன் முதலில் காணப்படுகின்றன. இதற்கு மஹா-நாராயணஉபநிடதம் என்ற பெயரும் உண்டு. இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டினது என்று கூறுவர்' இதன் பின்னர் கோயில் வழிபாடு என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். 'கோயில் வழிபாடு வேத வழிபாட்டு முறைக்கு மிகப் பெரிதும் மாறுபட்டதாகும் ' என்கிறார் கோண்டா. இந்தக் கோயில்கள் எவ்வாறு, எங்கே, எப்படிக் கட்டப்படவேண்டும் என்பதை முக்கியமாக ஆகமங்கள் எடுத்துக் கூறின. மேலும் ‘மானசார சிற்ப சாத்திரம்' என்ற நூலும் இதனை விரிவாகக் கூறியுள்ளது. இந்தக் கோயில்களில் உள்ள மூர்த்தங்கட்கு ஷோடச உபசாரம் என்று கூறப்பெறும் பதினாறு