பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'விராத்தியர்கள்' என்பவர்கள் வேதத்திலும் பஞ்ச விம்ஸ் பிராமணத்திலும் பேசப் பெறுகின்றனர். விராத்தியர் வழிபாட்டு மரபைப் பற்றி அதர்வண வேதமும், பஞ்ச விம்ஸ்ப் பிராமணமும் பேசுவதைப் பார்த்தால் இந்த விராத்தியர்கள் தமக்கெனத் தனியான சமயக் கொள்கையையும் சமுதாயக் கோட்பாடுகள், வாழ்க்கைமுறை என்பவற்றையும் அமைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் முழுமுதற் பொருளை 'ஏக விராத்திய என்று பெயரிட்டழைத்தனர். கரிய வயிறும், சிவந்த முதுகும் உடையவன்' என்று இவர்கள் கூறும்பொழுது ருத்ரன்தான் நினைவுக்கு வருகிறான். இவர்கள் யோகப் பயிற்சி உடையவர்கள் என்றும் தனிப்பட்ட துறவு முறையைப் பின்பற்றினர்' என்றும் தெரிகிறது. மேலும் அதே அதர்வண வேதத்தில்' இந்த விராத்தியர்களின் தெய்வங்கள் யாவர் என்று குறிப்பிடும்பொழுது பவ, ஸர்வ, பசுபதி, உக்ர, ருத்ர, மகாதேவ, ஈஸான என்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது. ஒரோ வழி ஏகவிராத்ய என்னும் இவர்கள் கூறும் கடவுள் மகாதேவன் என்ற பெயரிலும் பேசப்படுகிறான். பிராமணங்கள் கட்டளையிடும் பலிகளைப்பற்றிய கொள்கைகளை இவர்கள் ஏற்றக்கொள்ளா மல் மறுத்தார்கள் என்றும் அதர்வணவேதப் பகுதிகள்' கூறுகின்றன. அவர்கள் வாழ்வு முழுவதும் கடுமையான சில விரதங்களை மேற்கொண்டிருந்தனர்' என்றும் கூறுகிறது. 'இவற்றிலிருந்து ஒன்றை உறுதியாகக் கூறலாம். இந்த விராத்தியர்கள் வேத காலத்திலேயே தமக்கெனத் தனிப்பட்ட சமய மரபுடையவர்கள் என்றும் இவர்கள் மரபு ருத்ர வழிபாட்டுடன் மிகவும் தொடர்பு கொண்டிருந்தது என்றும் கூற முடியும். விராத்தியர்கள், முனிக்கள், பிரம்மச்சாரியர்கள் என்ற இந்த மூன்று கூட்டத்தாரும் கடுமையான தவம் மேற்கொள்ளு தல், ருத்ரனை வழிபடுதல் என்பவற்றில் பெரிதும் ஒற்றுமை யுடையவர்களாய் இருந்தனர் என்பதும் அறிய முடிகிறது. (210). 'அதர்வணத்தின் இரண்டு பாடல்களும் ' ருத்ரனுக்குரியவை என்றும் பாம்புகள் பற்றி அவை பேசுகின்றன என்றும் தெரிகிறது. பாம்புகட்கெதிராகப் பாடப்படும் இப் பாடலை' தைத்ரீய ஹோமம் செய்யும் குரு பாடவேண்டும். ருத்ரனைத் தொடர்ந்து செல்வோர் பட்டியலில் பாம்புகளையும் சேர்த்து ஆஸ்வலாயன க்ரஹற்ய சூத்திரமும் 'ஹரண்ய க்ரஹய சூத்திரமும் 'பேசுகின்றன. இவற்றைக் காட்டுவதன் நோக்கம் என்னவென்றால் ருத்ரனைப் பற்றி ஆராயும்பொழுது அவனுக்கென்று உள்ள தனித்தன்மைகள் யாவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற் கேயாகும் (214).