பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதத்தில் புகுந்த சிவன் 5 I ருத்ர-சிவவழிபாடு இந்தியா முழுவதும் பரவி இருந்த கொள்கை ஆகும் 'இதுவரைக் கூறியவற்றிலிருந்து ஒன்றைத் தெளிவாக அறிய முடியும். இந்தியா முழுவதும் பரவியிருந்ததும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததுமான ஒரு தெய்வமே வேதத் திலும் புகுந்து உள்ளது என்பதே அக் கருத்து. இந்த ஒரு தெய்வம் இந்தியா முழுவதும் பரவின. தொல்பழங் காலத்தில் பிராந்தியங்கட்கேற்பச் சிறுசிறு மாறுபாடுகளைப் பெற்றிருப் பினும் அடிப்படையில் மாறுதலை அடையவில்லை. இதனுடைய வலுவான செல்வாக்கினால் தாக்கப்பட்ட வேத குருமார்கள் இதற்கும் தம்முடைய வேதத்தில் இடங் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த பழந்தெய்வத்தின் இயல்புகளுள் பலவற்றை மூடிமறைத்துவிட்டு இடங்கொடுத்தனர். அதுவரை சாவுக்கு ஒரு தெய்வம் வேதவழியில் வகுக்கப்படாமையின் ருத்ரனுக்கு இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவுடன் இறப்புக்குரிய தெய்வமாக ஆக்கிவிட்டனர்(244). 'இந்தத்தொல் பழங்கால மக்களின் தெய்வக் கொள்கையை அறியவேண்டுமாயின் அதற்குரிய ஆதாரங்கள் அகப்படவில்லை என்பதைச் சொல்லத்தான் வேண்டும். திராவிட மொழி பேசும் மக்கள் அத் தொல் பழங்காலச் சமயத்தின் பல சின்னங்களை இன்னும் வைத்துள்ளனர். எனவே அங்கேதான் இதுபற்றி ஆராய வேண்டும். இன்னும் கூற வேண்டுமானால் இன்றுள்ள இந்து மதத்தில் ஆரிய வேத சமயத்தின் செல்வாக்கைவிட அத் தொல் பழங்கால சமயத்தின் செல்வாக்கே பல மடங்காக உள்ளது. ' வேதகால மக்கள் பொது இடங்களில் கோயில் போன்றவற்றில் சென்று வழிபட்டதாகத் தெரியவில்லை. இதன் எதிராகத் திராவிட மக்கள் நாம ரூபத்துடன்கூடிய அடையாளங்களை வைத்தே வழிபட்டனர். மரத்தின் கொம்பு (தறி) கல் என்பவற்றைத் திறந்த வெளிகளிலும், ஊருக்கு ஒதுக்கான இடங்களிலும் கோயில்போன்று வைத்தே வழிபட்டனர். இறந்து புதைக்கப்பட்டவர்களின் ஆவிகள் தம்மைத் துன்புறுத்தாமல் இருக்கவும் நலங்களைத் தரவும் இந்தத் தெய்வங்களை வழிப்பட்ட னர். இதுபற்றிக் கூறிவரும்பொழுது மிக முக்கியமான மற்றோர் கருத்தையும் திரு. தாண்டேகர் அடிக்குறிப்பாகக் கூறுகிறார். ' 'இந்தியா முழுவதும் பரவி இருந்த தொல் பழங்கால மக்களின் Proto-Indian சமய வழிபாட்டில் பெண் தெய்வங்கள் பெரும் அளவு பங்கு கொண்டிருந்தன. வேத வழக்கில் உஷா