118 பெரிய புராண விளக்கம்-1
' தண்டணை தோளிரு பத்தினொடும்
தலைபத் துடையானை
ஒண்டனை மாதுமை தான்நடுங்க
ஒருகால் விரலுன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல
விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகு
பொழில்வளம்புர நன்ன கரே."
' கடுத்தவா ளரக்கன் கைலை அன் றெடுத்த
கரமுரம் சிரம்நெரிந் தவற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
அருளினன் தடமிகு நெடுவாள்
படித்த நான்மறை கேட்டி ருந்த
பைங்கிளிகள் பதங்களைஒதப் பாடிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
மிழலையான் என வினை கெடுமே.”
பிறகு உள்ள 78-ஆம் கவியின் கருத்து வருமாறு :
"அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாகனார் தன்னை வணங்கும் பக்தர்களுக்கே சிவபெருமான் தன்னுடைய திரு வருளை வழங்குதல் உண்டு எனவும்; தன்னை வணங்கா தவர்களாகி பிழையான உள்ளங்களோடு மயக்கத்தை அடைந்தவர்களாகிய திருமாலும் பிரமதேவனும் தாழ் வாகிய பிறப்பைப் பெற்ற கரிய மிருகமாகிய பன்றியும், அன்னப் பறவையுமாக உருவங்களை எடுத்துக் கொண்டு திருவடிகளையும் திருமுடியையும் தரையைத் தோண்டிப் பார்த்துத் தேடியும், மேலே பறந்து தேடியும் அவற்றை ஆடைய முடியாமையால் சோர்ந்து விழுபவர்களாகிய அந்த இருவரும் ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை ஒதிச் சிவபெருமானைத் துதித்து உஜ்ஜீவனத்தை அடைந்த வண்ணத்தை விரிவாக எடுத்துத்
தி ருவ ய் ம ைiர் ளிச் செய்த ல் ரு