பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 191

“என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்

கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித் துன்றார் குழவினிர் தோனோக்கம் ஆடாமோ.'

'மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்வீர் வானம் தொழும்தென்னன் வார்கழலே நினைந்தடி யோம் ஆனந்தக் கூத்தன் அருள் பெறினாம் அவ்வணமே ஆனந்த மாகிநின் றாடாமோ தோனோக்கம்.”

'உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீஇருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்

இருப்ப தானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும்அரு

ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து

முடியும் வண்ணம் முன்னின்றே."

"முன்னின் றாண்டாய் எனை முன்ன

மியானே அதுவே முயல்வுற்றுப் பின்னின் றேவல் செய்கின்றேன்

பிற்பட் டொழிந்தேன் பெம்மானே என்னின் றருளி வர நின்று . போந்தி டென்னா விடில் அடியார் உன்னின் றிவனார் என்னாரோ

பொன்னம் பலக்கூத் துகந்தானே.'

"உகந்தா னே அன் புடையடிமைக்

குருகா உள்ளத் துணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால்

தக்க வாறன் றென்னாரோ