தடுத்தாட்கொண்ட புராணம் 罗岛岛。
நின்று கொண்டே. ஆட்கொள-அடியேனைத் தடுத்து ஆட். கொள்ளும் பொருட்டு. கொள. இடைக்குறை. வந்தஎழுந்தருளிய. மறையவனே-வேதியனே.ஆரூர்-திருவாரூரில். அமர்ந்த-விரும்பிக் கோயில் கொண்ட அரு-அருமையான. மணியே-மாணிக்கத்தைப் போன்றவனே. வாள்-வாள் களைப் போலவும்; ஒருமை பன்மை மயக்கம். கயல்-கயல் மீன்களைப் போலவும்; ஒருமை பன்மை மயக்கம். கொண்டஅழகிய தோற்றத்தைக் கொண்டுள்ள. கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மங்கை-மங்கையாகிய அல்லியங்கோதையை. பங்கா-வாமபாகத்தில் எழுந்தருளச் செய்தவனே. மற்று: அசைநிலை. நாயினேனை-நாயைப் போன்ற இழிவான அடியேணை. ப்: சந்தி. பொருளாக-ஒரு. பொருளாகத் திருவுள்ளத்தில் எண்ணி. நாள்-அன்றலர்ந்த, கமல-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பதம்-தேவரீருடைய திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். இன்று-இன்றைக்கு. தந்ததுஅடியேனுக்குப் பற்றுக்கோடாக வழங்கியருளியது. உன்தேவரீருடைய. பெரிய-பெரியதாக உள்ள கருணை அன்றேகருணை அல்லவோ. என்றார்-என்று சுந்தர மூர்த்தி: நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.
மகளிர் கண்களுக்கு வாள்கள் உவமை: வாளார்கண்... மடந்தை." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும்,
"வாட்கொண்ட நோக்கி.", "வாள் நெடுங்கண் செவ்வாய் மென்தோள் மலைமகளை.’’ என்று திருந்ாவுக்கரசு நாயனாரும், வாள்நெடுங்கண் மலைமகள்.', 'வாளன.கண்
மிடவாள்.', என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "வாட்ட டங்கன்'மட மங்கை நல்லீர்.’’ என்று மாணிக்க வாசகரும் . பாடியருளியவற்றைக் காண்க.
என்றும் கேடு இலர்தான்: கேடும் இலர்." என்று திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பிறப்பிலார் இறப்பிலர்.", பிறப்போ டிறப்பென்றும் இல்லாதான்.",