தடுத்தாட்கொண்ட புராண்ம் $8s
யினான்.” (உருக்காட்டு படலம், 59), அன்னம்ே என்னும்." (மாயா சீதைப் படலம், 45), "அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்த்ாள்.' (மீட்சிப் படலம், 344) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க. அன்ன நடையார் பொருட்டால்.', 'அன்னமென் நடையி னார் உன் அடியிணை வருட." (திக்கு விசயப் படலம், 94, 242),"அன்னமென்னடைநேர் நருமதை என்னும் அரிவை.' (கார்த்தவீரியார்ச்சுனப் படலம், 8), அன்ன மென்னடை...தேனும் க ல ந் த ந ன் மொ ழி யா ய்.", மென்னடை அன்னம் நின்னடைக் கஞ்சி வெளியிடை நின்றிட வெள்.கி.மறைய..' (சீதை வனம் புகு படலம், 16, 17), அன்னமென் னடையாள் மித்திரன் றன்னை அணு கிட' (இலவணன் வதைப் படலம், 21), அன்னம் அன்ன வள் அவ்வுரை கேட்டலும்." (அசுவமேத யாக்ப் படலம், 191) என்று உத்தர காண்டத்திலும், 'அன்னமென் னட்ை யினார் கலவியை.', 'அன்ன நடைமட ஆய்ச்சி." (பெரிய திருமொழி, 9. 7: 2, 10, 7: 14.), 'அன்ன நடைய அரம்பை யர்.', 'அன்ன நடையார் அலரேச.', 'அன்ன நடைய அணங்கு.', 'உமையென்னும் அன்ன நடைய அணங்கு." (பெரிய திருமடல்) என்று திவ்யப் பிரபந்தத்திலும் வருவன வற்றைக் காண்க. - . . . . . . . பிறகு உள்ள 169-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மேகத்தின் நிறத்தைக் கொண்டதும், நீல மணியைப் போன்றதும் ஆகிய கழுத்தைப் பெற்றவராகிய வன்மீக நாதருடைய வீரக் கழலைப் பூண்ட திருவடிகளைப் பரவை பணிந்து விட்டுத் தன்னுடைய கணவனை முன்னால் பெறு பவளைப் போலக் கூட்டமாகக் கூடிக்கொண்டிருந்த தன்னு டைய தோழிமார்கள் தன்னைச் சூழ்ந்து வர, அடைந்த பெரிய காம மயக்கத்தோடும் கொங்கைகளைத் தாங்கிக் கொண்டு தளர்ச்சியை அடையும் இடுப்பை உடைய அந்தப் பரவையும் வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனா .ரிடம் தனியாகப் போன உள்ளத்தைக் கொண்டு.
பெ.-2-24 - -