z芯9& - பெரிய புராண விளக்கம்-2
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், கொந்தார் பூங் குழலினாரை.', 'பூமென்கோதை உமை.', 'குராமன்னும் குழலாள்.', 'வம்பு பூங்குழல் மாது.', 'வம்பின் மலர்க் குழல் உமையாள். என்று திருநாவுக்கரசு நாயனாரும், "மட்டார் பூங்குழல் மலைமகன்.', 'குரவமரும் குழலாள் உமை.', 'குரவம் நாறிய குழலினார்.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், குரவம் கமழ்கோதை.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.
பின்பு வரும் 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
செந்தமிழ் நாட்டில் தெற்குத் திசையில் புகழ் பெற்று விளங்கும் திருநாவலூரில் வாழும் மக்களை ஆட்சி புரியும் அரசனாகிய சுந்தரமூர்த்தி எல்லாத் தேவர்களுக்கும் தலைவ னாகிய வன்மீக நாதன் வழங்கிய திருவருளால் மின்னலைப் போலவும் அமைந்திருக்கும் பூங்கொடியைப் போலவும் இருக்கும் இடுப்பைப் பெற்றவளாகிய பரவை என்னும் பெயரைப் பெற்றவளும், மென்மையான இயல்பைக் கொண்டவளும் ஆகியவளுடைய தங்க நிறம் அமைந்: திருக்கும் கொங்கைகளாகிய உயர்ந்திருத்தலைப் பெற்று இணைந்திருக்கும் மலைகளே தம்முடைய சார்பு ஆகப் பல தினங்களும் பழகும் யோகத்தைப் பரம்பரையினால் விருப்பத்தைப் பெற்று விளங்கினார். பாடல் வருமாறு:
தென்னாவ லூர்மன்னன் தேவர்.பிரான்
திருவருளால்
மின்னாரும் கொடிமருங்குற் பரவையெனும் х
மெல்லியல்தன் uொன்னாரும் முலைஓங்கற் புணர்குவடே
- சார்வாகப் புன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் .
'விரும்பினார்."