திருநாவுக்கரசு நாயனார் புராணம் 33 திறத்தானைத் இகழொளியைத் திருமாற் பேற்றெம் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் . - நானே. பிறகு வரும் 328-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளி ஏகாம்பரேசுவரரை, ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான்' என்ற சொற்றொடர் வரும் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி அந்த ஏகாம்பரேசுவரரை வணங்கி வாழ்த் திவிட்டுத் தன்னுடைய வாமபாகத்தில் பெண்ணாகிய பார்வதி தேவியினுடைய திருவுருவத்தைப் பெற்றவனை, பசுமையாகிய கண்களைப் பெற்ற இடபத் துவசத்தை உயர்த்திப் பிடித்தவனை, பாம்புகளைத் தன்னு 's டைய அணிகலன்களாக மகிழ்ந்து அணிந்து கொண்ட வனை, அழகு பெருகி எழும் விபூதியைத் தன்னுடைய திரு மேனி முழுவதும் பூசிக்கொண்ட அழகைப் பெற்றவனை அடைந்து அவனை வணங்கி விட்டு அந்த நாயனார் ஆனந் தத்தை அடைந்தார். பாடல் வருமாறு: - 'ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் பாகம் பெண் உருவானைப் பைங்கண் விடை உயர்த்தானை நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின் ஆகம் தோய் அணியானை அனைந்து பணிங் தின்புற்றார். ' ஏகம்.:ன்கான் அவன் என் எண்ணத்தான்' என.அந்தத் திருநாவுக்கரசு நாயனார் காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளி ஏகாம்பரேசுவரரை ஏகம்பன்காண் அவன் என் எண்ணத் தான்’ என்று வரும். என: இடைக்குறை. ப்:சந்தி, போற்றிஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி அந்த ஏகாம்பரேசுவரரை வாழ்த்தி வணங்கிவிட்டு. ப்:சந்தி. பாகம்.தன்னுடைய
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8.pdf/page35-802px-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8.pdf.jpg)