希4 பெரிய புராண விளக்கம்-இ. என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டை களாகிய மூன்று புரங்களை. புரம்: ஒருமை பன்மை மயக்கம். எரித்தருள-எரித்தருளும் பொருட்டு. எடுத்த-தம்முடைய திருக்கரத்தில் எடுத்துக் கொண்ட. தனி-ஒப்பற்ற. ப்:சந்தி. பொருப்பு - மேருமலையாக. ஆர் - அமைந்த. வெம்" கொடுமையாக இருக்கும். சிலையாரை-வில்லை ஏந்தியவ ராகிய அந்தப் பாசூர் நாதேசுவரரை. த்:சந்தி. தொழுது" அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு. "ழுந்து- தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு. போற்று. வார்-அந்தப் பாசூர் நாதேசுவரரை வாழ்த்துபவரானார். பிறகு வரும் 340-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்த வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் 'முந்தி: மூவெயில் எய்த முதல்வனார்' என்று தொடங்கித் தம் முடைய திருவுள்ளம் மெழுகைப் போலக் கரைந்து பக்தியி: னால் உருக்கத்தை அடைந்து பாடியருளும் ஒரு திருக்குறுந்: தொகையையும், ஒரு திருத்தாண்டகத்தையும், செய்யுட் சந்தம் நிறைந்த ஒரு திரு நேரிசையையும், முதலாக உள்ள" செந்தமிழ் மொழியில் அமைந்த பாசுரங்களை அந்த நாய னார் பாடிய ருளி அடியேங்களுடைய தந்தையாரைப் போன்றவராகிய அந்தப் பாசூர் நாதேசுவரர் வழங்கிய திரு. வருளைப் பெற்றுக்கொண்டு மேலேஎழுந்தருளுபவரானார்." கிாடல் வருமாறு: '4 s : முந்திமூ வெயில் எய்த முதல்வனார்' எனஎடுத்துச் சிங்தைகரைந் துருகுதிருக் குறுக்தொகையும் தாண்டகமும் சந்தம்நிறை நேரிசையும் முதலான தமிழ்பாடி எந்தையார் திருவருள்பெற் றேகுவார் வாகீசர். ’’
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8.pdf/page66-810px-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8.pdf.jpg)