பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பெருந்தகை மு. வ.

அம் மாநாட்டில் அவர் கலந்து கொண்டது சிறப்பாக எனக்கு மகிழ்வூட்டியது. அதிலும் சிறப்பாக ஸ்காட்லாந்தின் வனப்பு மிகு குன்றுகளுக்கும் எழில்மிகு ஏரிகளுக்கும் சிறப்பு மிகு சிற் ருேடைகளுக்கும் என் குடும்பத்தோடு நாங்கள் அவருடன் சுற்றுலா மேற்கொள்ள அவருக்கு நேரம் கிடைத்தமை எனக்குப் பெரு மகிழ்ச்சி அளித்தது. அவ்வின்பப் பயணத்தின்பொழுது தம்முடைய இனிய பண்புகளாலும், நயவுரையாலும், நல்ல நகைச்சுவையாலும் என் இரு புதல்வர்களை அவர் கவர்ந்து விட்டார். அவர்களுடைய மகிழ்ச்சிக்காக அவர் சொல்லிய கதைகளும் அவர்களுடைய மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டன. “

மு.வ. எங்கே சென்றாலும்-இருந்தாலும்-உள்ளங்கவர் கள்வராகவே இருந்தார் என்பது தெளிவாம்!

- - ங் - ங்

1. செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 50. பரல், ச. பக். உகக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/172&oldid=586248" இலிருந்து மீள்விக்கப்பட்டது