பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

பெருமானார் 63 வயதையடையும்போது இறப்பதற்குச் சின்னாட்கள் முன்பே இறைவனால் திருமறை முழுமையாக் கப்பட்டது. 23 ஆண்டுகள் இறைவனால் வானவர் தலைவ ரான ஜிப்ரீல் (அலை) மூலம் பெருமானார் பெற்ற இறை மொழிகளே ‘திருக்குர்ஆன்’. இது யாராலும் இயற்றப்பட்டதல்ல. இறைவனால் அளிக்கப்பட்டது.

திருத்தப்படா திருமறை

திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. 6666 வசனங்கள் உள்ளன. 86,430 சொற்களில் 3,22,671 எழுத்துகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. மொத்தம் 1,05,684 புள்ளிகள் உள்ளன. 1400 ஆண்டுகட்கு மேலாகியும் இத்திருக்குர்ஆனில் ஒரு புள்ளிகூட மாற்றப்படவோ திருத்தப்படவோ நீக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை திருத்தப்படா திருமறையாக திருக்குர்ஆன் விளங்கி வருகிறது.

நன்றி: ஓம் சக்தி