பக்கம்:பெருமூச்சு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாளிகை அமைத்திட வாரீர்! , திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சிய கீதமான, "திராவிடநாடு திராவிடருக்கே!" என்ற முழக்கம் சென்னை மாநில மாநாட்டிலே இரண்டு லட்சம் மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்திருந்தது. மாநாட்டின் நான்காம் நாள் நிறைவேறிய தீர்மா னங்கள் அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல அமைந்தது அந்த இலட்சியத் தீர்மானம். மாநாட்டிலே, கழகத்தின் முன்னணி வீரர்கள், தீர்மானங்கள் என்னும் திருவிளக்கேந்தி, தெளிவற்று இருண்டிருந்த பிரச்சினைகள் பலவற்றை, நாட்டினர் முன்னே எடுத்து வைத்து விளக்கவுரையாற்றி யிருக்கி றார்கள். அந்தத் தீர்மானங்களிலே திராவிட முன் னேற்றம் கழகத்தின் அரசியல், பொருளாதார, சமு தாயக் கண்ணோட்டங்களைச் சிறந்த முறையில் உணர முடிகிறது. நாடாள வந்தவரின் நாச விளையாட்டுகளைக் கண் டிக்கும் முறையில் தீர்மானங்கள். ஏழை பங்காளர், கோல் பிடித்த பிறகு, நூல் பற்றாக்குறையால் பிணமான ஏழைகளின் நிலையை விளக்கி, கைத்தறிப் பிரச்சினையிலே கவனம் செலுத்த வேண்டிய முறையை சுட்டிக் காட்டிடும் தீர்மானங்கள். 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/11&oldid=1706250" இலிருந்து மீள்விக்கப்பட்டது