பக்கம்:பெருமூச்சு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் வீரர்கள்! வீராதி வீரர்கள் விரண்டோடினர். நாட்டை யாளும் அமைச்சர் நாலுகால் பாய்ச்சலில் ஓடினர். சுட்டு விரல் அசைந்தால் சுட்டுத் தள்ளும் ராணு வப் படை கொண்டவர்கள் ஓடினார்கள். ரதகஜதுரக பதாதிகள் படைத்தவர்கள் பதறி ஓடினார்கள். யாரைக்கண்டு? எதிரி நாட்டுப் படை வீரர்களைக் கண்டா? பிரிட்டனின் போர் முரசு கேட்டா? அமெரிக்கரின் அணிவகுப்பைப் பார்த்தா? ரஷ்யப் பட்டாளம் வருவதாகச் செவியுற்றா? இல்லை.... இல்லை ஒரு கோமாளியைக் கண்டு ஓட்டமெடுத்தார்கள்; (மன்னிக்கவும் கோமாளி என்பது கலைவாணர் கிருஷ்ணனுக்குக் காமராசர் அளித்த வசவுப் பதக்கம்.) ஸ்ரீ வில்லி புத்தூரிலே மந்திரிகள் கலந்து கொள் ளும் மகாநாடு ! 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/21&oldid=1706261" இலிருந்து மீள்விக்கப்பட்டது