பக்கம்:பெருமூச்சு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு ஆமாம் புண்ய பூமியிலே பிறந்து அன்னை பாரத மாதாவின் அருள் பெற்று அந்தராத்மா தந்த வரத்தின் மகிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை பெற்று (நினைத்ததை சாதிக்கும் வல்லமை யென்பது பிள்ளை வியாபாரம் நடத்தச் சொன்னது - பிணமலை குவித்தது) மந்திரி பீடத்திலே அமர்ந்திருக்கும் மந்திரிமார் மகா பெரிய மகான்கள் ரஷ்யா சென்று வந்த பாவியின் முகத்தைப் பார்ப்பது கூட தோஷம் என்று கருதி பின் னங்கால் பிடரியில் இடிபட பாய்ச்சல் நடத்தி யிருக் கிறார்கள். கோலோச்சிடும் கோமான்கள் கோமாளியின் குர லுக்கு நடுங்கி யிருக்கிறார்கள். ஸ்ரீ வில்லிபுத்தூர், காம ராசர் போட்டியிடும் தொகுதி! அந்த இடத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் மகாநாடு நடத்திட விரும்பி யிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் களுக்காக உழைப்பதாகத்தலைவெடிக்க அலறியவர்கள், தர்பார் சூரர்களை அவமானப் படுத்திவிட்டு ஓடியிருக் கிறார்கள். ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்தவர் - ரஷ்யா வில் குலுங்கும் இன்பங்களைத் தாழ்த்தப் பட்டவரிடம் எடுத்துக் கூறினால் அத்தனை தாழ்த்தப் பட்டவர் களும் உடனே, அங்குள்ள பஞ்ச! மந்திரிகளைப் பார்த்து, “பாராள வந்தவரே! கேளுமய்யா ரஷ்யாவின் குதூகலத்தை !” என்று உரக்கக் கூவினால், என்ன செய்வது என்று பயந்து கொண்டுதான் ஓடி யிருக்கிறார்கள். . 0 0 0 0 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/22&oldid=1706262" இலிருந்து மீள்விக்கப்பட்டது