பக்கம்:பெருமூச்சு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது மக்களுக்குத் தனி எச்சரிக்கை திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நமது முடிவை அறிவித்த பிறகு கம்யூனிஸ்ட் ஏடான 'ஜன சக்தி' அந்தத் தீர்மானம் மிக மிக ஏமாற்றத்தை அளிப்பதாக வும் காமராஜர்களும் சாமியப்பாக்களும் வெற்றி பெறச் செய்ய உதவுமென்றும் குறிப்பிட் டிருக்கிறது. உண்மையில் சாமியப்பா வெற்றி பெற வேண்டு மென்று அதிகார பூர்வமாக உழைப்பவர்களிடம் கை குலுக்குகின்ற கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி அபாண் டத்தைச் சுமத்துவது ஏனோ தெரியவில்லை! நம் கழகத்தை 'உதிரிகள்' என்று கூறியவர்களி டம் சேர்ந்துகொண்டு, வெட்கத்தை விற்றுவிட்டு வாழ்வ தற்கு நாம் ஒப்பவில்லை யென்றால் நாம் எதிரிகளின் வெற்றிக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறுவது மிக மிகத் தவறான பிரச்சாரமாகும். நம்முடைய நேசக்கரம் நீட்டப்பட்ட நேரத்திலே அதைத் தட்டிவிடும் முறையில் நம் அடிப்படைப் பிரச் சினையை அவமதித்துவிட்டு "தேர்தலுக்கு மட்டும்வா" என்று அழைத்துவிட்டு, இப்போது "தேர்தல் தேனைப் 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/24&oldid=1706264" இலிருந்து மீள்விக்கப்பட்டது