பக்கம்:பெருமூச்சு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு வெள்ளையனை ஒழித்த காங்கிரசாரைப் பாராட்டிய அண்ணா, திராவிட நாட்டுப் பிரச்சினையை மறந்துவிட வில்லை! இதை நமது எதிர்ப்பாளர்கள், நம் சக்தியைக்கண்டு சங்கடப் படுவோர், நம் வளர்ச்சி கண்டு வயிறு எரிவோ ரின் வாய்ஜாலத்தில் மயங்கியுள்ள கம்யூனிஸ்டு நண்பர் கள் உணரவேண்டும். பொது மக்களும் இதுபோன்ற கபட நாடகப் பேச்சில் கவனத்தைச் செலுத்தாமல் காங்கிரசை ஒழிப்பதைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் திராவிட நாட்டுப் பிரச்சினைக்கு ஆதரவு தருவதாக உறுதி கூறிய அபேட்சகர்களைத் தேர்தலில் ஆதரிக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறோம். வாழ்க உண்மையான பொதுவுடமை! வாழ்க உண்மையான நேர்மை ! வாழ்க புனிதமான பொதுஜன சேவை! வீழ்க வீண் பித்தலாட்டம்! 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/36&oldid=1706279" இலிருந்து மீள்விக்கப்பட்டது