பக்கம்:பெருமூச்சு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி தான் உறுப்பினராகச் சேர்க்க முடியும் என்று வகுக் கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்தக் காரணத்தாலோ தெரியவில்லை; பாவம் ஜி.பி. சோமசுந்தரமும் பொள்ளாச்சி நடராசு, போன்றவர் சிறுவர்கள் என்று அழைக்கப் படுகிறார் கள். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கார் சட்டப்படி 'மைனர்' நீங்கிய பெரியவர்கள் ! இதுகூடத் தெரியாமல் இவர்களை சிறுவர்கள் என்று யாரும் அழைத்திருக்க மாட்டார்கள். சிறுவர்கள் என்றால் வயதான காலத்திலும் இளம் இதயம் படைத்தவர்கள் என்று பொருள்! இளம் இதயம் படைத்தவர், என்றதும் நமது கிழவர் எஸ்.வி.லிங்கம்! இவர்கள் திருமணத்திற்கு திட்டம் போடுவார் போல் தெரிகிறது! இல்லை இல்லை.... விளையாட்டுக்குத்தான் சொல்கிறேன் ! லிங்கம் அண்ணா நீங்கள் இப்போது எங்கே இருந்தாலும் சரி; அப்படி யெல்லாம் எந்த ஏற்பாடும் செய்து விடாதீர்கள்! நீங்கள் எங்கே ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்! நீங்கள்தான் சாமியாராச்சே! உங்களுக்குச் சொத்தா! சுகமா! வார்சா! மண்ணாங்கட்டியா? 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/39&oldid=1706282" இலிருந்து மீள்விக்கப்பட்டது