பக்கம்:பெருமூச்சு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அஹிம்சா விலாசம்” திராவிட சமதர்மக் குடியரசு நாட்டின் தென் மேற்கு மண்டலமாக அங்கம் வகிக்க இருக்கும் திரு விதாங்கூர் கொச்சிப் பகுதி காங்கிரஸ் ஆட்சிக்குச் சவக் குழி வெட்டும், தேவையான காரியத்தைத் திறமையுடன் செய்திருக்கிறது. தினந் தினம் வரும் தேனான சேதிகள் இந்தத் தித்திப்பான விஷயத்தைதான், விளக்குகிறது. 'அஹிம்சா விலாசம்” மாளிகையை மடமடவெனத் தரை மட்டமாக்கும் திருப்பணியின் ஆரம்ப அத்தியா யம் கேரளத்தில் துவக்கப்பட்டு விட்டது. 86 இன்னும் சில தினங்களில் தமிழ் நாட்டு மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்குச் செல்ல இருக்கிறார்கள். எதேச் சாதிகார, அக்கிரம அடக்குமுறைக் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் என்ன தீர்ப்பை அளிக்க இருக்கிறார்கள் என்பதை நாம் மிக நன்றாக அறிவோம். க காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறக்கூடாது என்பதற்கு ஒன்றல்ல, ஓராயிரம் காரணங்களை நமது எழுத்தில், பேச்சில் எடுத்துரைத் திருக்கிறோம். 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/41&oldid=1706284" இலிருந்து மீள்விக்கப்பட்டது