பக்கம்:பெருமூச்சு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கோயங்காவுக்கு போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும், திராவிடர் வாழ்வுக்குத் தரப்படுகிற அதிர்வேட்டு என்பதைத் திண்டிவனம் தொகுதி மறந்துவிடக் கூடாது! ஆலை அரசர்கள் வடநாட்டிலே! அரசியல் தலைமை வடநாட்டிலே, ஆட்சிக்கோல் வடநாட்டிலே! ய இவ்வளவு பிடியையும் வைத்துக்கொண் டிருக்கிற வடநாடு, செக்கிழுத்த தேசீய சிதம்பரத்திற்கு மதிப்புத் தராத வடநாடு, திருப்பூர் குமரனை நினைத்தும் பார்க் காத வடநாடு, தில்லையாடி வள்ளியம்மாளுக்கு புகழ் பாடாத வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிடும் வட நாடு, திராவிடத்தை மிதித்து வாழும் வடநாடு, திரா விடத்திலேயே அபேட்சகரையும் நிறுத்தி வைத்து, திராவிடத்தின் ஏமாளித்தனத்தை எடை போட்டுப் பார்க்கத் தீர்மானித்துவிட்டது! திருக்குறள் முனிசாமி, தி.மு. கழகத்தின் ஆதரவு பெற்றவர். திராவிடத் தனியரசுப் பிரச்சினையிலே அக்கரை கொண்டவர்! அவருடைய வெற்றி திராவிட நாட்டுப் பிரச்சினை யின் வெற்றி! [4] தி.மு.கழக மதுரை தீர்மானத்தின் வெற்றி! 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/51&oldid=1706295" இலிருந்து மீள்விக்கப்பட்டது