பக்கம்:பெருமூச்சு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் கூவுகிறது ! திராவிட முன்னேற்றக் கழகம் மதுரையில் கூடிய பொதுக் குழுவில் தீர்மானித்தபடி தி.மு.க. உறுதி மொழி ஒப்பந்த ஏட்டில் கையெழுத்திட்டவர்கள் சுமார் நூற்றைம்பதுபேர் அந்தந்த மாவட்டங்களின் குழுக்கள் கூடி அவர்களிலே ஏறக்குறைய எழுபது பேரைத் தேர் தலில் ஆதரிப்பது என்று முடிவு கூறப்பட்டது. அந்த எழுபது பேரிலே தென்னாற்காடு மாவட்டத் திலே இருபத்தி மூன்று அபேட்சகர்கள் நம் ஆதரவு பெற்றிருக்கிறார்கள். தென்னாற்காடு மாவட்டத்திலே இருபத்திமூன்று ஸ்தானங்கள். அந்த இருபத்திமூன்று இடங்களிலும் நம் கழகத்தின் ஆதரவு பெற்றவர்கள் போட்டியிடு கிறார்கள். திராவிட நாட்டுக் குரலை எழுப்புகிற தீரர்கள் ! நாட் டுப் பிரிவினையை எதிர்க்கும் நல்ல பாம்புகளைச் சந்திக் கும் கீரிகள் ! பிரிவினை கூடாது எனப் பெரு முழக்கம் செய்திடும் இருட்டுக் குகையில் ஒளிந்திருக்கும் சுயநலப் பேயர்களை நாட்டுக்கு அம்பலப்படுத்தும் அறிவு விளக்குகள்! 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/53&oldid=1706297" இலிருந்து மீள்விக்கப்பட்டது