பக்கம்:பெருமூச்சு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடோட்டிகள்! அன்றொரு நாள் திராவிடத்தைச் சுரண்ட வந்த வர்கள் மாடோட்டித்தான் வந்தார்கள் இமாலயத்தின் கணவாய்களின் வழியாக! இப்போதும் நம்மிடம் மாட்டோட்டி வருகிறவர்கள் திராவிடத்தை வடவரின் வலையில் சிக்கிடும் மானாக ஆக்கத்தான் பாடுபடுகிறார்கள். வடவரின் அடிமைகள் இவர்கள்! இவர்கள் ஓட்டி வரும் மாடுகள் நம்மையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வடவரின் அடிமையாக்க முயற்சிப்பவை. வட நாட்டு நாகரிகத்தை, வட நாட்டு மொழியை, வட நாட்டுக் கலாச்சாரத்தை திராவிடத்திலே பதிப்பது மட்டுமல்ல; வட நாட்டாரின் நிரந்தர எடுபிடியாக திராவிடத்தை மாற்றிவிட வேண்டுமென்ற தீ விர முயற்சி, மாடோட்டிகளால் நடைபெறுகிறது. காங்கிரஸ்தான் விடுதலை வாங்கித் தந்தது; சுதந் தரம் பெற்றுத் தந்தது; என்ற காரணங்களைக் காட்டி மக்களை மயக்கிவிடலாமென்ற துணிவு ஏற்பட்டிருக் கிறது அவர்களுக்கு! 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/57&oldid=1706302" இலிருந்து மீள்விக்கப்பட்டது