பக்கம்:பெருமூச்சு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு சுதந்தரம் வாங்கித் தந்தமைக்காக நம் சுகவாழ் யெல்லாம் இழக்க வேண்டுமென்று அர்த்தமல்ல! வ சுதந்தரம் இவர்களின் திறமையால், தியாகத்தால் மட்டும் கிடைத்துவிட்டதல்ல. சுதந்தரம் பெற்றோம் நாமும்தான் மகிழ்ந்தோம். அந்தரேநத்திலும் வெள்ளையனுக்குஏற்பட்ட நெருக்கடி, உலகப்போர் முடிந்து அவனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை- இந்தியாவைக் கட்டிக்காக்க முடியாத நிலைமை, இவை களும் முக்கிய காரணமா யிருந்தன விடுதலைக்கு என் பதை எடுத்துக் காட்டத் தவறிடவில்லை. சுதந்திர பூமிதான்! ஆனால் இங்கேதானே பிண மலைகள்! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான் தோன்றி தர்பார்கள்! வடவரின் கையிலே இருக்கும் கொடுங்கோலுக்குப் பெயரா, சுதந்தரம்! அடக்குமுறை தர்பாருக்குப் பெயரா சுதந்தரம்! திராவிடம் தனியாட்சி பெற்றிருந்தால், பிணங்கள் விழுந்திருக்குமா, இங்கே ! திராவிடம் தனியரசு செலுத்தியிருந்தால் மலேயா வுக்கும், இலங்கைக்கும் ஓடுவார்களா, திராவிடர்கள்! 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/58&oldid=1706303" இலிருந்து மீள்விக்கப்பட்டது