பக்கம்:பெருமூச்சு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்தல் கோவலன்! "காங்கிரஸ் துருப்பிடித்து விட்டது. லட்டுப், பூரி யைப்போல பதவியிலே ஆசைகொண்டு, அனேக தகாத பேர்வழிகள் இதற்குள் நுழைந்துவிட்டார்கள். காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்தபிறகு அனேக காங்கிரஸ்காரர்கள் சோம்பேறிகளாய், சுகவாசிகளாய் விட்டார்கள். இதனால் காங்கிரஸ் ஸ்தாபனம் பாதிக்கப் பட்டு பலஹீனப்பட்டு விட்டது. மேலே காணப்படும் வாசகங்கள் காஞ்சியிலிருந்து கிளம்பி வட்டமிடுபவை யென்று சிலர் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. காஞ்சியிலிருந்தோ, கம்யூனிஸ்ட் முகாமிலிருந்தோ வீசப்பட்ட கருத்துக்கள் அல்ல அவைகள்! ய காந்தீய வார்சுதான் கூறியிருக்கிறார், இந்தக் கனற் கக்கும் மொழிகளை ! கிருபளானி சொன்னார், பிரகாசம் சொன்னார், ரங்கா சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற நிலைமைபோய் நேருவே சொன்னார் என்பது பழக்கப்பட்டுவிட்ட, பரிதாபத்திற்குரிய இப்போது செய்திதான். 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/63&oldid=1706310" இலிருந்து மீள்விக்கப்பட்டது