பக்கம்:பெருமூச்சு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு "ஜீவானந்தத்தையே எதிர்க்கிறார்களே!" என்று கலக மூட்டுகிறார்கள், கண்யமிழப்பதையே கடமை யாகக் கொண்ட சிலர்! அந்தச் சிலர், மோகன் குமார மங்கலத்தையே, கே. டி. ராஜுவையே எதிர்க்கிறார்கள் என்பதை ஏன் தான் மறந்தார்களோ தெரியவில்லை. மோகன் குமாரமங்கலம் ஜீவாவைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமா? அல்லது சேலம் தோழர் பாலுவை விட குறைந்த ஓட்டுகள்தான் மோஹன் வாங்குவார்- பாலுதான் ஜெயிக்க முடியும் என்ற உறுதியான ஆருட இலட்சணமா? ஜீவாவின் வரிசையிலே உள்ளவர்தான் மோகன் குமாரமங்கலம். அத்தகைய மோகனை எதிர்த்து, தோழர் பாலுவை ஆதரிக்கும் அந்தத் தோழர்கள் நாம் ஜீவாவை எதிர்ப் பதைப் பெரிதுபடுத்தி விஷம வேலைகளில் இறங்கு கிறார்கள். ம இதை உணர்ந்தோ உணராமலோ அல்லது தேர்தல் நேரத்தில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று உணராதவர்போல காட்டிக்கொண்டோ கம்யூனிஸ்டு நண்பர்களும் நம்மீது ஏளன வார்த்தைகளை வீசு கிறார்கள். 66 “ மாலைமணி பக்தர்கள்” “அருள் சுரக்க வந்திருக்கிறார் அண்ணு” 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/74&oldid=1706321" இலிருந்து மீள்விக்கப்பட்டது