பக்கம்:பெருமூச்சு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு வும் - பெரியாருடன் கலந்து பணியாற்றவும் துணிந் திருக்கிற கம்யூனிஸ்டு நண்பர்கள், நம்மீது வீண்பழிகளை சுமத்துவது ஏனோ புரியவில்லை. ஆல்பர்ட் ஜேசுதாசன் திராவிட நாட்டுப் பிரச்சினை யைச் சட்டசபையில் முழக்குவேன் என்றார். ஜீவா அது இயலாது என்றார். நாம் ஆல்பர்டை ஆதரிக் கிறோம். இம்மாதிரியான சூழ்நிலை இல்லாத இடத்தில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்காதது மட்டுமல்ல, கழக பூர்வமாய் ஆதரிக்காவிட்டாலுங்கூட நம் முடைய ஓட்டுக்களை கம்யூனிஸ்டுகளுக்கே வழங்குவோம் என்ற உணர்ச்சி தான் பரவியிருக்கிறது. கம்யூனிஸ்டுகளை ஆதரிக் கிறோம் என்று சொல்லிவிட்டு மோகனை, கே.டி. ராஜுவை, இன்னும் பல கம்யூனிஸ்டு நண்பர்களை எதிர்த்திடும் விபரீதப்போக்கு கொண்டவர்கள் அல்ல நாம். கு இதைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்ப தோடு - கலக மூட்டுபவரும் -அந்தக் கலகத்தால் குழப்ப நிலையில் உள்ள பொதுமக்களும் நன்கு சிந்தித்து உணர வேண்டுமாய், உண்மை தெரிய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தோல்வியுற்ற காங்கிரசு மந்திரிகளுக்கு நமது அனுதாபத்தையும் வெற்றி வீரர் களுக்கு மகிழ்ச்சியையும் வழங்குகிறோம். 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/76&oldid=1706324" இலிருந்து மீள்விக்கப்பட்டது