பக்கம்:பெருமூச்சு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி மாடுகள் தலையாட்டுகின்றன; போடுவார் என்று! ஒரு சிறுவன், பெருமாள் மாட்டுக்காரனிடம் ஓடிவந் தான். பிண்ணாக்கு வேணுமா? புளியங் கொட்டை வேணுமா? பருத்திக் கொட்டை வேணுமா? பூம்,பூம்,பூம்,பூம் ! என்று கத்த ஆரம்பித்தான். பெருமாள் மாட்டுக்காரனுக்குக் கோபம் வந்துவிட் டது. ஆத்திரத்தில் எதுவும் சொல்ல முடியாமல் பூம்,பூம்,பூம் என்று வாத்தியத்தை முழங்கினான். நிறுத்தியதும், மாடுகள் தலையாட்ட ஆரம்பித்தன. அந்தத் தலையாட்டால், பிண்ணாக்கு வேணும், பருத்திக் கொட்டை வேண்டும் என்று சொல்வதுபோ லிருந்தது! பிண்ணுக்குச் சாப்பிடச் சொன்ன மாடே ! பருத்திக்கொட்டைச் சாப்பிடச் சொன்ன மாடே! இந்தா, பிண்ணுக்கு ! என்று எடுத்துக்கொண்டு சிறு வன் ஓடிவந்தான். உடனே பெருமாள் மாட்டுக்காரன், "சின்ன எஜமான் ஓட்டு கொண்டாந்து போடுங்க! இந்த மாடு ஓட்டைத்தான் சாப்பிடும்" என்று கெஞ்சினான். சின்ன எஜமானுடைய அப்பா சிரித்துக்கொண் டேயிருந்தார். 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/79&oldid=1706328" இலிருந்து மீள்விக்கப்பட்டது