பக்கம்:பெருமூச்சு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு "பாருங்கசாமி,பாருங்க எதாவது ஒரு பழசுபட்டுக ஒரு ஓட்டு போடுங்க" என்று பல்லைக் காட்டினான். அவர் மௌனமாயிருந்தார். அய்யா போடுவாரா? பூம், பூம், பூம் ! மாடுகள் தலையாட்டின. வீட்டுக்காரர் உள்ளே போனார். பெருமாள் மாட்டுக்காரனுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. 66 "அய்யா உள்ளே போயிருக்கிறார், ஓட்டுக்கொண்டு வந்து போடுவாரா?" பூம், பூம், பூம். 66 "அய்யா போடுவாரா? பூம், பூம்,பூம்!" உள்ளே சென்ற அய்யா, போட்டுவிட்டார்! எதை? கதவுக்குத் தாழ்ப்பாளை ! பெருமாள் மாட்டுக்காரன், திகைத்தபடி, ஈனஸ்வ ரத்தில். 66 "அய்யா போடமாட்டாரடா?பூம்,பூம்,பூம்!" என்றான். மாடுகள் தலையாட்டிக்கொண்டே இருந்தன. பூம்! பூம்!! பூம் !!! 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/80&oldid=1706329" இலிருந்து மீள்விக்கப்பட்டது