கடியலூர் உருத்திரங்கண்ணனார் புலமை நலம் சான்ற பெரியராவர். அவர் பாக்கள் அரிய நயம் பல செறிந்து தோன்றும். அவர் எதைக் கூறினும் ஏதேனும் ஓர் அரும்பொருளை உள்ளடக்கியன்றிக் கூறார். அவர் அழகிய உவமைகளை எடுத்து ஆளவேண்டிய இடம் அறிந்து ஆளும் அறிவினராவார். - -
“முழவின் அன்னமுழுமா உருளி -
-பெரும்பாணாற்றுப்படை-47
தான் தனித்திருக்கப் பொருள் தேடிப்போன தலைவனை, பகற்காலமெல்லாம் தான் வாழ்ந்திருந்த மரத்தைத் தனியேவிட்டு பழந்தேடிப்போகும் வெளவாலோடு ஒத்திட்டு, கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி கூறுவதுபோல உருத்திரங்கண்ணனார் இயற்றியப் பாடல் ஒன்று குறுந்தொகையுள் இடம் பெற்றுள்ளது. -
‘பகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுள் மாலை...’
--குறுந்தொகை-352. -
பொருள் தேடிப்போகும் தலைவன் கூற்றாக அமைந்த - பாடல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
- வயங்குமணி பொருத வகையமை வனப்பிற் போர்மடி நல்லிறைப் பொதியி லானே.
, -அகம்-167