பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

“என் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில், புலவர் எழுதிய கடைசி கட்டுரையில், ‘என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். கல்வி கரையில, கற்பவர் நாள் சில. காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி தொடரும்” என்று அவர் தம் தமிழ்ப் பணியைத் தொடர வேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார்.ஆனால், காலம் இடம் தர்த் தவறி விட்ட தனால், முற்றுப் பெறாத நிலையிலே அவருடைய எழுத்துப் பணி எச்சமாகவே நின்று போயிற்று! காலம் செய்த கொடுமை அது! - -

தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும். உயர்வு தேடித் தரும் வகையில், எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள்: “செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல் போலத் தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார். -

அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று, * ,

“வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி’ - ‘மனையுறை புறாக்கள்’ ஆகிய இலக்கிய நூல்களையும்,

தமிழக வரலாறு-வரிசை என்ற பெயரில், ‘தமிழக வரலாறு-சங்க காலம்-அரசர்கள் “தமிழக வரலாறு-கோசர்கள் -

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்’ ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.