பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

அவர்கள் பாடிச் சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறி விட்டார்கள். -

விழிப்புணர்வு இருந்தவர்கள். அழிந்தன போக, அழியா திருந்த அப்பழம் பாக்களையெல்லாம் அரிதின் முயன்று தேடிக் கொண்டார்கள்.

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்று கூடி இருந்தும், அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, என்ற தலைப்புக்களில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான எட்டுத் தொகை நூல்களில் இடம்பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம் கால மக்களும் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்ட காரணத்தால், அவ்வரிசை யுள் முதற் கண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான நற்றிணையினை நற்றிணை விருந்து” என்ற தலைப் பிலும், நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பிக்கப் பெற்ற தான குறுந்தெர்கையினை, குறுந்தொகைக் கேர்வை’ என்ற தலைப்பிலும், ஆறாவது இடம் அளிக்கப் பெற்றது. ஆயினும், கற்றறிந்தார் போற்றும் கலி’ என்ற சிறப் பினைப் பெற்றதான கலித்தொகையினைப் பாலைச் செல்வி’, குறிஞ்சிக் குமரி, மருதநிலமங்கை முல்லைக் கொடி’, நெய்தற்கன்னி என்ற ஐந்து தலைப்புகளில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன்.

அவ்வெட்டுத் தொகை வரிசையுள் நான்காவதாக நிற்பதும், ஒத்த பதிற்றுப்பத்து என்ற பாராட்டினைப் பெற்றதுமாகிய பதிற்றுப்பத்தின் விளக்கத்தினை அளிக்க முன் வந்து முதலும் ஈறும் இல்லாமல் போக, இடையில்

+