பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


”தம்மிடம், திருமண விழாவுக்குத் தகுந்த உடை இல்லாத காரணத்தால் வர இயலவில்லை என்றும் வருவதாக இருந்தால், புதிய உடை தைப்பதற்காகும் செலவுத் தொகையை செக்காக இத்துடன் சேர்த்து அனுப்பியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அது ஒரு பாவம்

பந்து விளையாட்டுக்களை விரும்பாத ஷா, குத்துச் சண்டைகளைப் பார்த்துக் களித்திருக்கிறார். அதில் அவருக்குச் சிரத்தை உண்டாயிற்று.

நூல் நிலையத்துக்குச் சென்று, குத்துச் சண்டை பற்றிய நூல்களைப்படித்தார். பிறகு, அதில் தமக்குள்ள அக்கறையே ஒரு வகையான பாவம் என்ற முடிவுக்கு வந்தார்.

களவு போனால் கவலை இல்லை

ஷாவின் வீட்டில் ஒருமுறை கொஞ்ச ரூபாய் திருட்டுப் போயிற்று. அதைப்பற்றி போலீசாரிடம் புகார் கூற வேண்டும் என்று அக்கம்பக்கத்திலிருப்போர் தூண்டினார்கள். அவர்களிடம் ஷா கூறியவை:

“புகார் ஏன் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டால் பிறரிடமிருந்து அவன் மறுபடியும் திருடாமல் இருப்பதற்காக