பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


“எவ்வளவு ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். கால் முழுவதும் எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்? ஒரு பகுதியை மட்டும் எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்? இவற்றை எல்லாம் வியாபாரம் போல் கருதி, ஆராய்ந்து பார்த்து, தீர்மானிக்க வேண்டும்” என்று பதில் எழுதினார் ஷா.


நடிகர்கள் ஏமாற்றுவதில்லை

எல்லோரிடத்திலும் குறையைக் கண்டு, குறும்பு செய்து எள்ளி நகையாடும் ஷா, நடிகர்களிடம் மட்டும் தனிப்பட்ட அன்பு செலுத்தி வந்தார்.

ஒரு நடிகருக்கு எழுதிய கடிதத்தில்:

“மற்றவர்களுடைய வாழ்க்கைத் தொழில்களைக் காட்டிலும் கலைத்துறையில் பித்தலாட்டமும் ஏமாற்றமும் குறைவு என்பது என்னுடைய தீர்மானமான கருத்து. பெரிய நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள், சமயத் தலைவர்கள் இவர்களின் வாழ்க்கையை விட, நடிகராகிய உங்கள் வாழ்க்கையே தனிச் சிறப்புடையது, விரும்பியதக்கதாகவும் இருக்கிறது. ஏன் என்றால், உங்கள் வாழ்க்கையில் பித்தலாட்டம் எதுவும் இல்லை. நீங்கள் ஹாம்லெட்டாக நாடக மேடையில் தோன்றும்போது, ஹாம்லெட்டாக நடிப்பதாகவே காட்டிக்கொள்கிறீர்கள். ஆனால் நீதிபதி தாம் உண்மையாகவே நீதிக்கு இருப்பிடம்