இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்
ஷா வாழ்ந்து வந்த பகுதியிலுள்ள ஒரு கல்விக் கூடத்துக்கு ஒருமுறை வருகை புரிந்தார்.
“தங்கள் வருகையின் ஞாபகார்த்தமாகக் கல்விக் கூடத்துக்கு ஏதாவது பரிசு அளிக்கலாமே?” என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.
“கல்விக் கூடங்களை எல்லாம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்க வேண்டும் என்று கூறுபவன் நான். அவ்வாறு உங்கள் பள்ளியைத் தகர்த்தால் , அருகிலுள்ள என் இல்லத்துக்கு ஆபத்து உண்டாகும். ஆகவே, இந்தப் பள்ளியிலுள்ள மாணவர்களில், மிக மோசமான நடத்தை உடைய மாணவனைத் தேர்ந்தெடுங்கள். அவனுக்குப்பரிசு அளிக்கின்றேன்” என்றார் ஷா.
அவர் கூறிய கருத்தை தலைமை ஆசிரியர் ஏற்கவில்லை.
லண்டன் நகரத்தின் பிரபல அரங்கில் ஷாவின் நாடகம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரசிகர்கள் மிக உற்சாகமாக, ஆரவாரத்தோடு ரசித்துக்கொடிருந்தனர்.