இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்
அயர்லாந்துக்காரர்கள் லண்டனுக்குக் குடியேறியவாறு இருந்தார்கள். அரசியல்வாதி ஒருவர், அயர்லாந்துக் காரர்களின் வருகையைப் பற்றி வெறுப்போடு ஷாவிடம் கூறினார்.
“புத்திசாலிகள் அப்படித்தான் வந்துகொண்டு இருப்பார்கள்” என்று ஷா பதில் அளித்தார்.
ஷாவும் ஒரு அயர்லாந்துவாசிதான்!
ஷாவைப் பார்த்து, பத்திரிகை நிருபர் ஒருவர், “உங்களைப் பிரிட்டனுக்கு சர்வாதிகாரியாக்கிவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார்.
அதற்கு ஷா, “அநேகமாக நீரோவைப்போல வெறியனாகி விட்டாலும் ஆகிவிடுவேன். ஏன் இப்படி சில்லரைத்தனமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்?” என்று பதில் அளித்தார்.
ஷாவின் நண்பர்கள் சிலர், பார்லிமெண்ட் தேர்தலுக்கு அவரை நிற்கச் சொன்னார்கள்.