பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

79


எண்ணற்றத் திறமையை அவர்கள் பொது வாழ்க்கையில் பொறுப்பு உணர்ந்து பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய ஆற்றலானது பொதுமக்களின் முன்னேற்றத்துக்கு இடைவிடாமல் உதவவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பொதுக் கடமைகளில் இருபாலாரும் ஈடுபடக் கூடாது. ஒரு பாலாருக்கு இடம் இருக்கவேண்டும் என்று ஏற்பட்டால், நான் அவற்றைப் பெண்களின் பொறுப்பிலேயே விட்டுவிடவேண்டும் என்றே கூறுவேன்.

ஆண்களுக்கு உணவு அளித்து வளர்ப்பதிலும் ஆட்சி செலுத்துவதிலும் பெண்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர். அந்தப் பயிற்சியால், அந்தத் திறமையானது அவர்களுக்கு இயற்கை உணர்வுபோல் ஆகிவிட்டது. ஆனால், ஆண்களோ எப்போதும் பெண்களை ஆள முடிந்ததில்லை. ஆகையால், பெண்களின் பொறுப்பில் பொது வாழ்க்கையை விடுவதே சிறந்தது.

என்னைப் பொறுத்த வகையில், என் வாழ்நாள் முழுதும், நான் பெண்களின் உதவியைப் பெற்றுச் சார்ந்தவனாகவே இருந்து வருகிறேன். இதை நான் நன்றாக உணர்கிறேன். அவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவனாக நான் நடந்து கொள்ளாவிட்டால், அவர்கள் விழிப்படைந்து, என்னால் இனி பயன் இல்லை என்று கண்டபோது, பெண் தேனீக்களைப்போல் என்னை ஒழித்து விடுவார்கள்