பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்
93
நடிகரின் கடிதத்தைப் பார்த்தார் ஷா. அதற்காகச் சிறிதும் கவலைப்படவிலலை. “மருந்துகொடுத்த மருத்துவர் நோயாளியிடமிருந்து வெறுப்பை எதிர்பார்ப்பதுபோல் நானும் எதிர்பார்த்ததுதான்” என்றார்.
ஷாவின் எழுத்துக்களில் காணப்படும் வேறுபாட்டையும், பொருத்தமற்றதையும் குறைகூறுவோர்க்கு ஷா பதில் கூறுகிறார்:
“என் கண்களைப் பரிசோதனை செய்த கண் மருத்துவர் அளவான நிலையில்தான் இருக்கிறது” என்றார்.
“அப்படியானால் என்னுடைய கண்கள், மற்றவர்களின் கண்களைப் போல இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார் ஷா.
கண் மருத்துவர் அதை மறுத்து, “இல்லை, இல்லை மற்றவர்களின் கண்கள் பெரும்பாலும் இவ்வாறு இருப்பதில்லை. உங்களுடைய கண்கள் தனி ரகமானவை. மிக நல்ல கண்பார்வை இருக்கிறது. அளவான நிலை என்றால் பொருள்களை, உள்ளது உள்ளபடியே பார்த்து அறியும் ஆற்றல் நூற்றுக்குப் பத்துப் பேருக்குத்தான் உண்டு” என்றார்.
அதைக் குறிப்பிட்டு, “அப்பொழுதுதான், நான் கற்பனைகளை எழுதி வெற்றி பெறாததன் காரணத்தை