பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சூடும் சுவையும்


பெர்னார்ட்ஷாவிற்கு ஒரு கண்ணாடிப் பூந்தொட்டியைப் பரிசாகக் கொடுத்து, மேஜைமீது வைத்துவிட்டுப் போனார். அவரது நண்பர் ஒருவர். அவர் மறுமுறை, வந்தபோது, அந்த பூந்தொட்டி அதே இடத்தில் வைத்தபடியே இருந்தது. அதில் பூவே வைக்கப்படவில்லை.

‘என்ன, பூந்தொட்டியை வெறுமனே வைத்திருக்கிறீர்கள் ? உங்களுக்குப் பூக்களைக் கண்டால் பிடிக்காதோ...’ என்று கேட்டார் நண்பர்.

அதற்கு, ‘எனக்குக் குழந்தைகளைக் கூடத்தான் ரொம்பப் பிடிக்கும். அதற்காகத் தெருவில் காணும் குழந்தைகள் அத்தனை பேருடைய தலையையும் வெட்டி வந்து மேஜை மேல் வைத்துவிடுவதா?’ என்று பதிலளித்தார் ஷா!


இம்மாதிரியான சூடும் சுவையும் நிறைந்த 150 நிகழ்ச்சிகளின் குவியல்