126 பேசாத பேச்சு
என்றும், இரட்டைக்கை யென்றும், இணக்கை யென்றும் கூறுவர்.
ஒற்றைக் கைகள் முப்பத்து மூன்று வகைப்படு மென்று அடியார்க்கு நல்லார் சொல்கிரு.ர். அந்த முப்பத்து மூன்றில் மேலே சொன்ன கதையில் வரும் இரண்டும் அடங்கும். விரித்த பெருங்கொடிபோல இருத்தலின் பதாகை என்ற பெயர் ஒரு முக்கிாைக்கு வந்தது. பதாகை - பெருங்கொடி. கத்தரியைப் போலத் தோற்றுவதனுல் ஒரு முத்திரைக்குக் கத்தரிகையென்ற பெயர் வந்தது. இளம் பிறையைப்போல இருப்பதனல் இளம்பிறையென்றும், கிளி மூக்குப் போல்வதனல் சுகதுண்டமென்றும், மொட்டுப்போல இருப்பதால் முகுள மென்றும் சில முத்திரைகள் பேர்பெற்றன. இப்படியே மற்றவற்றின் பெயர்களும் உருவ ஒற்றுமையாகிய காாணத்தால் அமைந்தன. - -
. . . முப்பத்து மூன்று ஒற்றைக் கைகள் வருமாறு:பதாகை, கிரிபதாகை, கத்தரிகை, தாபம், அாளம், இளம்பிறை, சுகதுண்டம், ويتامي கடகம், சூசி, பதும கோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திாம், பிாமாம், தாம்பிா குடம், பிசாசம், முகு .ௗம், பிண்டி, தெரிநிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகா முகம், வலம்புரி. r
இரட்டைக் க்ைகளால் காட்டும் முத்திசைகள்: பதினைந்து வகைப்படும்.
ஒற்றைக்கையால் காட்டும் பதாகையை இரண்டு கையாலும் காட்டி இணைத்தால் அது அஞ்சலியாகும்: