பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ יריתי- י"ב" - _ _ _ _ _ - நாம் சுவாசிக்கின்ற உயிர்க்காற்றை இடகலை. பிங்கலை என்று கூறுவது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். இடது பக்க நாசியால் இழுப்பது இடகலை. வலது பக்க நாசியில் இழுப்பது பிங்கலை. இந்த இரண்டையும் மங்கையர் என்றும் அழைக்கின்றார்கள் சித்தர்கள். இந்த உடம்பாகிய கூடத்தில் மங்கையராக விளங்குகின்ற இடகலையும், பிங்கலையும், அதன் வழியாகச் செல்லும் காற்றானது ஒடுவர், மீளுவர், உள்ளிருந்து நீடுவர், பிறகு கூடுவர் என்று அவற்றின் அழகான செயல்களைத்தான், வயத்தில் அடக்கினால் என்று கூறுகின்றார். கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஒடுவர், மீளுவர் பன்னிரெண்டு அங்குலம் நீடுவர் ( 557 திருமந்திரம்) இப்படிச் வயத்தில் அடக்குகிறபோது இரத்தத் தூய்மையினால் அதனைப் பெறுகின்ற செல்கள், தெம்போடு உழைக்கின்றன. செல்கள் செழிக்கின்றன. காரணம் செல்களில் தேங்கி விடுகின்ற கழிவுப்பொருட்கள் எல்லாம் விரைவில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. இப்படிச் செல்களைச் சீராக்குகின்ற காரணத்தால் இயற்கையின் தாகத்தால் தேகமானது தள்ளாடுகின்றதல்லவா? செல்களின் இயற்கையான முதிர்ச்சியின் காரணமாக தேகத்தில் தோல் பாகமானது கொஞ்சம் தளர்ந்து போகிறது. தடித்துப் போகிறது. மினுமினுப்பும் குறைந்து விடுகிறது. ஆகவே, உடம்பின் கால வரையறைப்படி உடம்பில் ஏற்படும் முதுமையானது வெளிப்புறத்திலே தெரிந்தாலும், அகத்திலேயே - A) - - - *--- - . Դ-- - . (". .-- , - , - arra u r-r--r-s-a r-r-r