பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கைகளின் இடை வெளியில் ஊற்றி அதைப் பருகினுல், ஆண் குழந்தை ஜனனமாகும் என்றும் ஆல மொக்குகள் எட்டை எடுத்து அரைத்து, கரந்த பாலில் அச்சாற்றை ஊற்றிக் கலந்து, அதைக் கருப்பவதியின் இடது மூக்கில் ஊற்றினுல், பெண் ஜனனம் என்றும், வலது மூக்கில் ஊற்றினல் ஆண் ஜனனம் என்றும் வைத்திய சாஸ்திரம் கூறுவதாக நம்பப்படுகிறது.

நல்ல நாள் கணித்து, சுபமுகூர்த்தம் கண்டு, "முதலிரவு என்றும் சாந்தி முகூர்த்தம்’ என்றும் பல தானம் என்றும் புதுணைத் தம்பதியர் உடலுறவு (Sexual intercourse) கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதும், மேற். சொன்ன பரம்பரை வழிப்பட்ட நம்பிக்கையின் அடிப் படையில்தான் என்பதை நாம் நம்புவதற்கு நம்முடைய பகுத்தறிவு தாராளமாகவே இடமளிக்கச் செய்யும்.

ஆண் பெண் உறவின் அடிப்படையில் இருக்கும் இனவிருத்தி-சிருஷ்டி-சமுதாயச்சேவை போன் ற குறிப்புகளையும் அத்தம்பதிகள் உணர வேண்டும். உடலுற வின்போது, ஆணும் பெண்ணும் வெளிப்படுத்த நேரிடும் ஜீவதாதுவின் மகத்துவத்தையும் அவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர் க ள் தங்களுடைய உடலுறவுக் கேளிக்கைகளை அளவுடன் வைத்துக் கொள்ள முடியும். அளவு கடந்த உடற் சேர்க் கைகளின் விகாவாகவும், புத்திர உற்பத்தி உண்டாகாமல் தடைப்பட ஏதுவுண்டு என்பதையும் அவர்கள் நிலப்படுத்

திக்கொள்ள வேண்டும்.

உ வுக்கு

யயும் நிலவிப்