பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பத்துமாத அதிசயங்கள் !

இனவிருத்தி என்பது உலகப் பொது தர்மமாகவே அமைந்து விட்டது.

ஆளுல், இன்றுள்ள நிலையில் ஜனப் பெருக்கம் காரண மாக, கருத்தடை என்றும் குடும்பக் கட்டுப்பாடு என்றும் காரசாரமாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்காக உலகின் எல்லாப் பகுதிகளிலும் கருத்தடை வளையங்கள் என்றும் கருத்தடை மாத்திரைகள் என்றும் அந்தந்தப் பகுதிகளின் ஆட்சிகளே வழங்கியும் வருகின்றன. இம்மாதிரிப் பயங் கரங்கள் பிள்ள்ைகுட்டிகள் மலிந்த பெற்றேர்களுக்காக

ஏற்பட்டவை. -

ஆளுல் அளவான முறையில் குழந்தைகள் பெற்ற பெற்ருேர்கள் தாங்களே இந்தப் பலனின் நல்ல விளைவு கண் அனுபவ பூர்வமாக உணரக் கூடும். இதற்கெனவே திட்டமிட்ட குடும்பமே வாழ்வின் இன்பம்’ என்றும், *ஆசைக்கொரு பெண்ணும் ஆஸ்திக்கொரு ஆணுமே குடும்பத்தின் ஜீவவிளக்குகள். இவையே குடும்ப ஒளிக்குப் போதும்’ என்றும் விளம்பரங்கள் நம் கவ னத்தை ஈர்க்கின்றன.

உண்மைதான்!

ஆம்; உண்மையேதான். ஒரு குடும் பத் தி ன்