பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

சப்பாடு செல்லாது. என்ருலும் அதற்கு ஈடாகவே இப் பழங்கள் உதவமுடியும். நல்ல நித்திரை, பரிசுத்தமான காற்று, அளவான தேகப் பயிற்சி முதலியன நல்லது. பேரீச்சம் பழங்கள், தக்காளி, திராட்சை. அத்தி முதலியன உடம்புக்கு நல்லவை. இவை ரத்தம், மூளை, எலும்பு, நரம்புகளுக்கு ஊக்கமும் ஊட்டமும் தரும்.

  • 从 * * #. ● * 晚 வயிற்றுக் குமட்டல் வாந்தியைப்போக்க வைட்மின் பி-சத்துப்பொருள்கள் உதவும்.

மார்பகங்கள் பெரிதாகாவிடினும் ஒருவித நமைச்சல் இருக்கும். அவை பளுவாகவும் கெட்டியாகவும் நிறைந் திருப்பவை போலவும் தோன்றும். மிருது வாயும் நோயுட னும் கூடியதாக இருந்தால், வெந்நீர் ஒத்தடம் கொடுத்து விளக்கெண்ணெய் தடவி உருவிவிடலாம். அவற்றைத் தொங்கவிடாமல், மேலே தூக்கிப்பிடித்த விதத்தில் கச்சை கொண்டு கட்டிவைக்கலாம்.

இப்போதுதான் முலைகள் பருத்து முலைக்காம்புகள் கறுப்படையும். - -

சிலருக்கு கர்ப்பம் தரித்த பிறகுங்கூட, முதல் இரண்டு மாதங்களில் தூரமாகும் தினங்கள் வரும்போது, கொஞ்ச அளவுக்கு உதிரம் வெளியாவதுண்டு. இதல்ை அச்சப்படத்தேவையில்லை; உடலுக்கு ஆயாசம் தரும் அலுவல்களைச் செய்யக்கூடாது. -

அடிக்கடி சிறு நீர்க்கழிவு ஏற்படும். இதுவும் சில வாரங்கள் வரை நீடித்து அப்பால் நின்றுவிடும். அவ் வாறு நிற்காவிடில், டாக்டர் அம்மாக்களே நாடவேண்டும். களப்புமிகுதிப்படும். தூக்கம் சதாவரும். நாளாக ஆக, சில தருணங்களில் தாயாகப் பதவி உயர்வுபெற விருக்கும்.பெண்களுக்கு எதைக் கண்ட்ாலும் ஓர் எரிச்சல்