பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தாகவேண்டும். சிறு நீரில் அல்பூமன் (Albumen) எனப் படும் பிசிதம் கலந்திருந்தால் கைகால் வீக்கம் தொடங்கி, அதன் மூலம் இசிவு நோய் வரவும் கூடும். இவற்றின் சிகிச்சைக்கு டாக்டர்களின் உதவிவேண்டும்.

வெந்நீர் சாப்பிட்டால் நீர் பிரியும். நீரும் மலமும் அடைபடும். எனிமா கொடுக்கலாம். சுடுநீரை தொட்டி யில் நிரப்பி, இடுப்பு ஸ்நானம் செய்யலாம். நீர்த்தாரை யில் ரணம் இருந்தாலும், கருப்பை நிலை பிசகியிருந் தாலும், மனப்பாதிப்பு ஏற்பட்டாலும் நீரடைப்பு உண்டா கும். பிரசவ வேதனையிலும் இந்நிலை சம்பவிக்கும். நீர் பருகுதல் அடிக்கடி கையாளவேண்டும். பார் லி த் தண்ணிரை அடிக்கடி குடிக்கவேண்டும். அத்துடன், சிகிச்சையும் மேற்கொள்ளவேண்டும்.

எச்சில் ஊறல்

இப்போது வாயில் எச்சில் அடிக்கடி உண்டாகும். கடுக்காயைத் தூள் செய்து அதை வெந்நீரில் கலக்கி அடிக்கடி வாய் கொப்புளித்தால், வாயில் புளிப்புச் சுவை யுடன் ஊறும் உமிழ் நீர் மட்டுப்படலாம்.

மசக்கை :

கருத்தரிப்பு ஏற்பட்டவுடனேயே கருப்பிணிகளுக்கு மேசக்கை வந்துவிடும். இது ஒரு நோயல்ல; ஆலுைம், பலம் குறைந்து, ரத்த ஊட்டம் குறைவு பட்டவர்களுக்கு இம்மசக்கை அதிகமாகப் பாதிக்கும். அதிலும் தலைச்சன் பிள்ளைக்காரிகளுக்கு புதிய அனுபவம் காரணமாக, இதல்ை தெ சம்பவும் தொல்லப்படுவார்கள். உடற் சோர்வும் களேப்பும் கால்நோயான வாந்தி, குமட்டல், தலைவலி போன்றவையும் உண்டாகும்.

பே-6